ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடிய நிலையில், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.