புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2019

Breaking News
------------------------
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிகோத்தாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த நிபந்தனைகளும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த நிபந்தனைகளும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

எந்த வித நிபந்தனைகளையும் விதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் இரு தரப்பிற்கும் இடையில் கைச்சாத்திப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad