தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும், மக்கள் கருத்தாடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக முடிவெடுத்த பின்னர், முதலாவது ஆதரவுக்கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் முத்துராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி. சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா உட்பட தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் குறித்த கூட்டத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்து கொண்டார்.