புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2020

சிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்?

Jaffna Editor
இலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை அமைச்சரவை பதவியேற்பில் பங்கெடுக்க சிறையிலுள்ள பிள்ளையானை அழைத்து செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையில் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.

குறித்த அமைச்சு பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் 28

பாதுகாப்பு

நிதி

புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்கள்

நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி

நீதித்துறை

வெளிவிவகாரம்

பொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி

கல்வி

சுகாதாரம்

தொழில்

சுற்றுச்சூழல்

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு

விவசாய வேளாண்மை

நீர்ப்பாசனம்

காணி

மீன்வளம்

பெருந்தோட்டம்

நீர்வழங்கள்

மின்சாரம்

ஆற்றல்

நெடுஞ்சாலை

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை

போக்குவரத்து

இளைஞர்கள் மற்றும் விளையாட்டு

சுற்றுலா

வர்த்தகம்

தொழில்

ஊடகம்

ad

ad