இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தமிழசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இன்று தத்தமது வீடுகளில் மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவை.சேனாதிராஜா தெல்லிப்பழையில் உள்ள தமது வீட்டில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இதன்போது அவரது மகன் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கலையமுதனும் சுடர் ஏற்றினார்.
சிவஞானம் தமது வீட்டில் நினைவுச்சுடர் ஏற்றினார்.