அப்பாவும் அம்மாவும் வெளியே சென்ற வேளை, வீட்டில் உள்ள சாமி அறைக்குச் சென்று அங்கே சில நேரம் சாமியை கும்பிட்டு விட்டு, குறித்த
சாமி அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் மாருதி என்ற இந்த 22 வயதுப் பெண். இவர் மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்று இணையம் மேலும் அறிகிறது.யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு மத்தியில் தற்கொலைகள் கணிசமான அளவு அதிர்கரித்துக் கொண்டு செல்கிறது. காதல் தோல்வி என்றால் தற்கொலை. பரீட்சையில் புள்ளிகள் சரியாக எடுக்க முடியவில்லை என்றால் தற்கொலை என்று. எந்த ஒரு காரணத்திற்கு இது தான் முடிவு என்று இளைய தலைமுறையினர் நினைப்பது பெரும் அபத்தமான செயலாக உள்ளது.
மாருதி சாமி அறையில் நேற்று தற்கொலை செய்ய, காதல் தோல்வியே காரணம் என்று அயலவர்கள் நிருபரிடம் தெரிவித்துள்ளார்கள்