புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2020

உடுப்பிட்டி - பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி மரணம்

www.pungudutivuswiss.com
விளையாட்டு வினையாகியதில் பாம்புக் கடிக்கு இலக்காகி இன்று (30) அதிகாலை ஒரு மணியளவில்  ஒருவர் மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் உடுப்பிட்டி வடக்கு வெலியந் தோட்டத்தைச் சேர்ந்த மகேசன் தவம் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.  சம்பவம் பற்றி தெரியவருவதாவது,  இவரின் வீீீட்டிற்கு பாம்புகள் வரும் போது அதனை அடிக்காமல் துரத்தி விடுவது வழமை. அவ்வாறே நேற்று இவர் மதுபோதையில் இருந்த போது  இரவு 8 மணியளவில் பாம்பை கண்டவர். பாம்பைக் கையால் பிடித்து விளையாடி விட்டு வெளியில் கொண்டு சென்று விட்டுள்ளார்.  அதன் பின்னர் அதிகாலை 1 மணியளவில் நெஞ்சடைப்பதாக கூற உறவினர்களால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்படுகிறது

ad

ad