இதனையடுத்து புதுடில்லி திரும்புவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் நேற்று சம்பந்தனை அவர் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் விவகாரங்கள் குறித்தும், வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாகவும் பேசியதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். |