மேலும் மிருசுவிலில் வங்கி உத்தியோகத்தருடன் தொடர்புடைய குடும்பத்துக்கு கொரோனா தொற்று கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புடைய பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் துரித நடவடிக்கையால் இந்த 13 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களுடன் தொடர்புடையோர் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.