புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2021

கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக மேதாவித்தனம் - காங். உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சி

www.pungudutivuswiss.com

காங்கிரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஒரு புதுவிதமான டிமாண்டை திமுக முன்வைத்தது. அதைக் கேட்ட காங்கிரஸ் தரப்பு அதிர்ந்துள்ளது. ‘பொதுவாக காங்கிரஸ் வலுவாக உள்ள இடங்களில் இதுவரை காங்கிரஸ்தான் போட்டியிட்டு வந்துள்ளது.




இந்தமுறை அதில் ஒரு மாற்றம் வர வேண்டும். ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சாதகமான தொகுதி என்றாலும் அந்தத் தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் ஒருவர் போட்டியிடுவாரேயானால், அந்தத் தொகுதியைத் திமுகவுக்கு கொடுக்க வேண்டும்’ என திமுக கோரிக்கை வைத்துள்ளது. ‘அது எப்படி முடியும்? காங்கிரஸ் வலுவான தொகுதி என நீங்களே கூறும் நிலையில், அங்கு அமைச்சர் போட்டியிட்டால் அதை எப்படி திமுகவுக்கு விட்டுத்தர முடியும்’ என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


அதற்குப் பதில் சொன்ன திமுக, ‘காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியைத் திமுகவிற்கு கட்டாயம் விட்டுத்தர வேண்டும். ஏனென்றால் அமைச்சர்கள் நிறைய காசு செலவு செய்வார்கள். அதைச் சந்திக்க உங்களால் முடியாது. திமுக அதற்கென சிறப்பு திட்டங்களை வைத்திருக்கிறது’ என திமுகவினர் அனைத்து கூட்டணிக் கட்சிகளிடமும் புதிய கண்டிஷனை விதைத்து வருகிறார்கள்.

ad

ad