புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2021

பிரித்தானிய இளவரசர் காலமாகியுள்ளார்

www.pungudutivuswiss.com
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் துணைவரும் எடின்பேர்க் கோ மகனுமாகிய இளவரசர் பிலிப் காலமாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய நேரம் இன்று நண்பகல் தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் இளவரசர் காலமாகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலாமானார். அவருக்கு வயது 99.


இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார். அவருக்கு வயது 99. கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த இளவரசர் பிலிப் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றிருந்தார்.


இந்த நிலையில், தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் இளவரசர் பிலிப் உயிர் பிரிந்ததாக அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் பிலிப் ஆவார்.

ad

ad