உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், கனடாவில் மூளையை தாக்கும் மர்ம நோயினால் 6 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கோடிக்கணக்கான மக்களை கொரோனா பாதித்து வரும் நிலையில், இந்தியாவில் பூஞ்சை தொற்று நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவில் ஆரம்பித்து நாளுக்கு நாள் இவ்வாறான புதிய நோய்கள் மக்களை பாதித்து வருவது பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் கனடாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய நோய் மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மர்மமான மூளை பாதிப்பு நோயால் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பார்வை குறைபாடு, நினைவு திறன் குறைதல், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக கூறப்பட்டு வரும் நிலையில், நோய்க்கான காரணங்களை அறியமுடிவில்லை என்று மருத்துவர்கள் கூறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது