மே 18 ம் திகதி சபையின் வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தீர்மானத்தில் ஆதாரமற்ற அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடும் சந்தேகங்கள் எழுவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான ஒரு தரப்பான தன்மையை கருத்தில்கொள்ளும்போது இது வெறுமனே மனித உரிமை குறித்த தீர்மானம் இல்லை என்பதை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு மாறாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் குழுவினரால் விடுதலைப்புலிகளின் பிரிவினைவாத நோக்கத்தை முன்னெடுக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சியாக இது தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளை முன்கொண்டு செல்வதற்காக அமெரிக்க காங்கிரஸில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரின் அழுத்தம் காரணமாக இந்த யோசனை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது