புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2021

யாழில் வீட்டில் மரணித்த பெண்ணுக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகளினால் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

73 வயதுடைய இந்த பெண் உயிரிழந்த பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் இருந்த 5 பேரும் வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ad

ad