புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2021

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

www.pungudutivuswiss.com
லங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்று இருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் 2-ம் தர இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை எளிதில் தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275- ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலன்கா 65 ரன்கள் அடித்தார். பந்து வீச்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக புவனேஷ்குமார், சஹால் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து, 276- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் (53 ரன்கள்) தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

கடைசி கட்டத்தில் தீபக் சஹார் அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். அவருக்கு புவனேஷ்குமாரும் நல்ல கம்பெனி கொடுத்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றியை ருசித்தது. 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை எட்டியது. தீபக் சஹார் 69-ரன்களிலும் புவனேஷ்குமார் 19-ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ad

ad