புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2021

திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கு

www.pungudutivuswiss.com
திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் சீனாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உத்திகளில் ஒன்றாகவே திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போதே இது குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதில் பெரும் பங்காற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு கொடுக்கவுள்ள தகவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை வைத்து இலங்கை அரசாங்கம் செய்யவுள்ள திரைமறைவிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை இந்த அறிக்கை ஊடாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார அம்பலப்படுத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் 3000 அமெரிக்க டொலர் முதலீட்டுப் பெறுமதியாக இந்த உடன்படிக்கை செய்யப்படவுள்ளது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் வசந்த பண்டார தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கம் செய்துகொள்ள உத்தேசித்துள்ள உடன்படிக்கையானது ரணில் - மைத்திரி தலைமையிலான அரசாங்கம் செய்துகொள்ளவிருந்த எம்.சி.சி உடன்படிக்கையை விடப் பயங்கரமானது என்று எச்சரித்துள்ளார்.

அதனூடாக 33 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்கா வசமாகப் போவதாகவும், அந்தக் காணிகளில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கே முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகத்தில் ஈடுபடும் நோக்கில், அமெரிக்கா தமது படைகளை அங்கு அழைத்துவராது என்பதை உறுதிபடக் கூற முடியாது என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளரான வசந்த பண்டா மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad