புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2021

வைத்தியசாலைகளில் குவிந்துள்ள சடலங்கள்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்று மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



இலங்கையில் கொரோனா தொற்று மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கொவிட் சடலங்கள் 22 வரை உள்ளதாகவும் அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிண அறையின் குளிரூட்டிகளில் சடலங்கள் வைப்பதற்கு இடமில்லாமையினால் அதற்கு வெளியே வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பான்மையான சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக பிரதேசத்தின் சுடுகாடுகளை 24 மணித்தியாலங்கள் முழுவதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சடலங்களை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்

ad

ad