கடந்த சில தினங்களாக மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி மழையில் நனைய நேரிட்டதாகவும், அதனால் தனக்கு தடிமன் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு கலந்துகொள்ள நேற்று முன்தினம் கொழும்பு வந்த நிலையில், கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் கொரோனா பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார். அதன் போதே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தற்போது அவர் குறித்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸுக்கான சிகிச்சை பெற்று |