புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2021

முல்லைத்தீவு 13 வயதுடைய சிறுமிபாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி புதன் கிழமை முதல் 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.


முல்லைத்தீவு - மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி புதன் கிழமை முதல் 13 வயதுடைய சிறுமி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை
ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் மீட்பு தொடர்பிலான விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார். திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் சடலம் காணப்பட்டுள்ளது.

சடலத்திற்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் தூரம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமியின் சடலத்தினை அயல் வீட்டார் கோழியினை காணவில்லை எனத் தேடிச் சென்ற போதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ad

ad