புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2021

32 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தபால் ஊழியர்கள்

www.pungudutivuswiss.com
பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 32 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய இன்று மாலை 4 மணி முதல் நாளை நள்ளிரவு வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை , பல தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை 10 மணிக்கு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளனர்.



தபால் ஊழியர்கள் மற்றும் தபால் திணைக்களத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார, தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள தபால் நிலையங்கள், உப தபால் நிலையங்கள் மற்றும் முகாமைத்துவ அலுவலகங்களைச் சேர்ந்த சுமார் 25,000 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருடனான பேச்சுவார்த்தையின் போது சாதகமான தீர்வுகள் வழங்கப்படுமாயின் வேலைநிறுத்தம் செய்வதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ad

ad