மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த 18 வயதான உதயகுமார் பானுசன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் ரயில் பாதையைக் கடந்த வேளை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதியதில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் இன்று பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்கு ஆடைகளை தைக்க சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |