புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2022

புலிகளுக்கு சல்லியூட் அடித்த கோட்டா மற்றும் முப்படைத் தளபதிகள்- வரலாற்றில் மறைக்க முடியாது !

www.pungudutivuswiss.comgmail sharing button Email

இலங்கை வரலாற்றில் மறைக்கவே இல்லை மறக்கவோ முடியாத ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை நேற்று முன் தினம்

இடம்பெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில், விடுதலைப் புலிப் போராளிகளின் படங்களை வாகனத்தில் ஒட்டி, அந்த வாகனத்தை ஓட்டி வந்துள்ளது ராணுவம். இந்த ராணுவ வாகனத்தைப் பார்த்து கோட்டபாய ராஜபக்ஷ உட்பட முப்படைத் தளபதிகளும் சல்லியூட் அடித்துள்ளார்கள். ராணுவத்தினர், தமது சிப்பாய்களின் படங்கள் என நினைத்து, தவறுதலாக இந்த படங்களை ஒட்டி விட்டார்கள் என்று நம்பப் படுகிறது. இல்லையென்றால் யாரோ ஒருவர் குறித்த படங்கள் எது என்றே தெரியாமல், இன்ரர் நெட்டின் தேடி அதனை அச்சடித்துக் கொடுத்து விட்டார். ஆனால் அவை அனைத்துமே…

விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள். கடைசியாக விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு இலங்கை ஜனாதிபதி. முப்படைத் தளபதிகள் சல்லியூட் அடிக்கவேண்டி வந்து விட்டது. இதனை தான் காலம் என்பார்கள். ஆயுள்வரை இதனை மறக்க மாட்டார் கோட்டபாய. யாரோ வைச்சு செய்து விட்டார் போலவும் இருக்கு. புகைப்படங்கள் கீழே உள்ளது பாருங்கள் தமிழர்களே…. புலிகளின் தியாகங்களை தம்மை அறியாமலே மதிப்பளித்துள்ள சிங்களத்தை…

ad

ad