எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை உக்ரைன் நிலைமை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா, இத்தாலி, போலந்து, ருமேனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஆணையம் மற்றும் நேட்டோ தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் சந்திப்பில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது ரஷ்யாவால் உக்ரைனில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தாம் அஞ்சுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேச நாடுகளிடம் தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க முடிவெடுத்தால், கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நேட்டோ நாடுகளுக்கு வலியுறுத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. |