புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2022

திவாலாகியது இலங்கை! இரண்டு வாரங்களுக்கு கூட டொலர்கள் இல்லை - வெளியானது அதிர்ச்சித் தகவல்

www.pungudutivuswiss.com
இலங்கை தற்போதே திவாலாகிவிட்டதாகவும், இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு இலங்கையில் டொலர்கள் இல்லை எனவும் குறிப்பாக கூறினால் டொலர்களே இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாடு கடுமையான டொலர் பற்றாக்குறையில் இருக்கும்போது, இலங்கைக்கு பொருட்களை எடுத்து வந்துள்ள கப்பல்களுக்கு நாள் ஒன்றுக்கு 18ஆயிரம் டொலர் தாமதக்கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன.

இதுவரை காலத்தில் இரண்டு கப்பல்களுக்கு 3லட்சத்துக்கு 60ஆயிரம் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கொழும்பில் நடத்திய மக்கள் போராட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுனவின் ஆதரவாளா்கள் மற்றும் கடந்த தேர்தலில் அந்தக்கட்சிக்கு நிதியுதவி செய்தவர்களும் பங்கேற்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைத்த கோட்டாபய ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் நாட்டை நடத்திச்செல்லமுடியாது என்பதை வலியுறுத்தியே அவர்கள் நேற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.


மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் நடத்திய சந்திப்பின்போது, நாட்டை மீட்டெடுக்கும் திட்டங்கள், அரசாங்கத்திடம் இல்லை என்பது தெரியவந்தது.

500 மில்லியன் டொலர்களுக்காக திருகோணமலை எரிபொருள் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர்களுக்காக அரசாங்கத்தினால் எவை வழங்கப்படபோகின்றன என்பதை எதிர்காலத்தில் பார்க்கமுடியும்.


இதேவேளை ஜனாதிபதி இன்றைய தமது உரையில் பதவி விலகப்போவதாக கூறவேண்டும். அல்லது நாட்டை கட்டியெழுப்ப தம்மிடம் உள்ள திட்டங்களை கூறவேண்டும். இதனை தவிர வேறு எதனையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.

ad

ad