குறித்த அதிகாரி சம்பவத்துக்கு முன்னர் , பிரதேச அரசியல்வாதியுடன் தொடர்புகொண்டதாகவும் பின்னர் குடிபோதையிலேயே துப்பாக்கி சூட்டை நடத்துமாறு உத்தரவிட்டதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். இதேவேளை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசிமின் வாகனத்தை சரத் வீரசேகர பெற்றிருந்த போதும் அவரது மகனே அதனை பயன்படுத்தியதாக நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை தற்கொலை குண்டுதாரியான இப்ராஹிம் வாகனத்தை புலனாய்வு துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்தி வருவதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். |