புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2022

இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரவுபதி முர்மு.: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து

www.pungudutivuswiss.com
டெல்லி: இந்திய 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு 70%-க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி சார்பில், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடந்தன. இந்த தேர்தலில் 771 எம்பிக்கள் மற்றும் 4025 எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 99 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. இதில் பதிவான வாக்குகள் வாக்குப்பெட்டியில் அடைக்கப்பட்டு சீல் வைத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. முதலில் எம்பிக்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. அகர வரிசைப்படி 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை ராஜ்யசபா பொதுச்செயலாளர் பிசி மோடி அறிவித்தார்.

அதன்படி பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். 2-வது சுற்று முடிவில் திரவுபதி முர்மு 4,83,299 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 1,89,000 வாக்குகளும் பெற்றனர். மேலும் 3-ம் சுற்று முடிவில் திரவுபதி முர்மு-2,161 வாக்குகளும் யஷ்வந்த் சின்ஹா -1,058 வாக்குகளை பெற்றுள்ளனர்.

மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வாக்கு மதிப்பு 6.76 லட்சம், யஷ்வந்த் சின்ஹா வாக்கு மதிப்பு 3.80 லட்சமாக பதிவாகியுள்ளது. எம்.பிக்களின் வாக்கு எண்ணையிகையில் திரவுபதி முர்மு 540 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 204 வாக்குகள் பெற்றனர். மொத்தம் உள்ள 1,138 எம்.எல்.ஏ.க்களின் வாக்கு எண்ணிக்கையில் திரவுபதி முர்மு-809 வாக்குகள், சின்ஹா யஷ்வந்த் -329 வாக்கு பதிவாகியுள்ளது. இதனால் மூலம் 70%-க்கும் மேலான வாக்குகளை பெற்று இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக தேர்வான குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு-க்கு, எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

ad

ad