9ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கையின் கடற்பரப்பிற்குள் கடற்படை கப்பலில் தங்கியிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பி முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார். 13ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ள ஜனாதிபதி பின்னர் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார். அதேவேளை, நேற்று மதியம் ஜனாதிபதி திருகோணமலை கடற்படைத் தளத்தில் இருந்து, விமானப்படை ஹெலிகொப்டரில் ஏறும் புகைப்படம் ஒன்றும் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. |