கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலேயில் அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விமானத்தில் கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி இரண்டு மெய்க்காவலர்கள் பயணம் செய்துள்ளனர். அதேவேளை, பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. |