இந்த வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம். அந்தச் சேவைக் காலத்திற்குப் பணம் செலுத்த தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படும். அந்த நேரத்தில் நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடாது மற்றும் முறையான பயிற்சியும் கட்டாயமாகும். தற்போது, இளைஞர் சமுதாயம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க 16 வயதாகிறது. புதிய சட்ட திருத்தங்களுக்குமைய, பாடசாலை மாணவர்களும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஆபத்தான வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், அவற்றில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது. மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பில், EPF மற்றும் ETF பணம் செலுத்தும் போது பிரச்னை ஏற்படுவதால், அதற்கான சட்டங்களிலும் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டுக்கு உகந்த பணியாளர்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும் என குறிப்பிடப்படுகின்றது. |