எனினும், ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். முன்னதாக ஜனாதிபதியுடனான பேச்சில் கலந்துகொள்ளும் போதிலும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சி ஆதரவளிக்காது என்று ஜே.வி.பி. தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |