புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2022

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகியது இலங்கை

www.pungudutivuswiss.com
சிங்கபூரில் நடைபெற்றுவந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் சிங்கபூர் அணியை 63-43 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இன்று ஞாயிற்றுகிக்கிழமை (11) நடைபெற்ற இந்தப்போட்டியில் முதல் இரண்டு கால்பகுதியில் இலங்கை அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

2023 வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற்றது இலங்கை!

முதல் கால்பகுதியில் இலங்கை அணி பின்னடைவை சந்திக்க 19-13 என சிங்கபூர் அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது கால்பகுதியில் தங்களுடைய முன்னிலையை சிங்கபூர் அணி தக்கவைத்துக்கொண்டது.

இரண்டாவது கால்பகுதியின் நிறைவில் இலங்கை அணி சிங்கபூரை நெருங்கியபோதும், 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கபூர் அணி முன்னிலை பெற்றுக்கொண்டது.

முதல் பாதியில் பின்னடைவுகளை சந்தித்த இலங்கை அணி, மூன்றாவது கால்பகுதியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. சிங்கபூர் அணிக்கு அழுத்தத்தை கொடுத்த இலங்கை அணி 46-38 என முன்னிலையை பெற்றுக்கொண்டது.

தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்த இலங்கை!

இதனைத்தொடர்ந்து ஆரம்பித்த இறுதி கால்பகுதியில் தங்களுடைய முன்னிலையை தக்கவைத்துக்கொண்டு போட்டியில் முன்னேற்றத்தை காட்டிய இலங்கை அணி 63-53 என வெற்றிபெற்று சம்பியனாக மகுடம் சூடியது.

இதேவேளை மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஹொங்கொங் அணியை 54-42 என வீழ்த்திய மலேசியா அணி, மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டது.

முடிவுகள்

  • இலங்கை 63 – 53 சிங்கபூர்
  • மலேசியா 54- 42 ஹொங் கொங்

ad

ad