இலங்கையைச் சேர்ந்த இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் ஒன்று La Courneuve பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதன்கிழமை நள்ளிரவு La Courneuve (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue Marcellin-Berthelot வீதியில் இலங்கையைச் சேர்ந்த இருவர் மீது ஆறு பேர் கொண்ட குழு கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இச்சம்பவத்தில் இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகினர்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தடைந்த போது தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரில், 23 வயதுடைய இளைஞன் பலியானதாகவும், இரண்டாம் நபர் படுகாயமடைந்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குரிய காரணம் குறித்த விசாரணைகளை La Courneuve காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.