இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்புரைகளை பரப்பும் பலர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விபரங்களை கட்சியின் சட்ட குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த அவதூறு பரப்புரைகளை தற்போது சமூக ஊடகங்களில் பல குழுக்கள் முன்னெடுத்து வருவதாகவும், பல்வேறு பெயர்களில் தோன்றி பொதுஜன பெரமுன மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் சேறு பூசும் சமூக ஊடகங்களில் இந்த குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார் |