புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2022

ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை 
பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் 
சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

 வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆடு மேய்க்க சென்று இருந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வரையில் வீடு திரும்பாத நிலையில் , இளைஞனின் தந்தை தேடி சென்ற போதே இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார். 

வலிப்பு காரணமாக உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. 

சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ad

ad