புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2022

திமுக எம்.பி., ஆ.ராசாவின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

www.pungudutivuswiss.com
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது.

இந்தநிலையில்,தி.மு.க.எம்.பி.ஆ.ராசாவின் பினாமி கம்பெனிக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தி.மு.க.எம்.பி.ஆ.ராசா கடந்த 2004&ம் ஆண்டு முதல்,2007-ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக இருந்த போது,நாட்டிலேயே பெரிய ரியல்எஸ்டேட் கம்பெனி ஒன்றுக்கு சுற்றுசூழல் சம்பந்தப்பட்ட அனுமதி ஒன்றை வழங்கி உள்ளார். இதற்காக ஆ.ராசாவின் பினாமி கம்பெனி பெயரில் கோவை மாவட்டத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.55 கோடி ஆகும்.

முறைகேடான பண பரிமாற்றம் மூலம் இந்த நிலம் வாங்கப்பட் டுள்ளது,கண்டறியப்பட்டு,உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த 45 ஏக்கர் நிலம் அமலாக்கத்துறையால் முடக்கப்பட் டுள்ளது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad