புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2023

யாழ். மாவட்டத்தில் 3 கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது


சோசலிச சமத்துவக் கட்சி, ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி, ஜனதா சேவக கட்சி, சிங்களதீப தேசிய முன்னணி, புதிய ஜனநாயக மார்க் லெனினிஸ்ட் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் நேற்று பல மாவட்டங்களுக்கு கட்டுப்பணத்தை செலுத்தியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர நேற்று 11 சுயேச்சைக் குழுக்களும் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றைய தினம் செலுத்தியது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தலைமையிலான குழுவினரால் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதுவரை யாழ்.மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சைக் குழுக்களும் இதுவரை உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

ad

ad