புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2023

தனித்தா- கூட்டாகவா போட்டி? - முடிவு இன்னும் இல்லை!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

மட்டக்களப்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுத் தாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது, அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.

அரசாங்கம் இந்தத் தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது.

இந்த வேளையில், இதனைத் தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்கக் கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.

சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு.

இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன்வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்தத் தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும்,யுவதிகளையும் இந்தத் தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” - என்றார்.

ad

ad