யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டாரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ்போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். குறித்த இடத்தில் போலீசார் மட்டும் போலீஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது வாள்வெட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு அண்மையில் போக்குவரத்துபொலிசார் கடமையில் ஈடுபட்டபோதிலும் பொலிசாரின் கண்ணில் மண்தூவி விட்டு குறித்த வாள்வெட்டு குழு தப்பித்துள்ளது. |