புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2023

விடுதலைப் புலிகளின் 9 ஆயுதக் கப்பல்கள்! அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கிய செய்தி - அமைச்சர் அலி சப்ரி தகவல்

www.pungudutivuswiss.com
விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது.
 இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் 
ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது என வெளிவிவகார
 அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை தாம் நிராகரிப்பதாக இதன்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது ஒரு முழுமையான முட்டாள்த்தனம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்நதும் தெரிவிக்கையில்,

நாங்கள், எங்கும், எவரும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல.

இலங்கைக்கு உதவிய அமெரிக்க புலனாய்வு தகவல்கள்
விடுதலைப் புலிகளின் 9 ஆயுதக் கப்பல்கள்! அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கிய செய்தி - அமைச்சர் அலி சப்ரி தகவல் | Us Intelligence Information About Ltte

நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல. இந்தியா, சீனா, ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன. அவர்களின் போர்க்கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன.

இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர். அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும்.

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது.

இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது, அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம். சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம்.

நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது. இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது என குறிப்பிட்டு
ள்ளார். 

ad

ad