புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2023

வன்முறையினால் ஓய்வூதிய சீர்திருத்தம் மீளப்பெறமாட்டாது! - உள்துறை அமைச்சர் சீற்றம்..!!

www.pungudutivuswiss.com
வன்முறையினால் ஓய்வூதிய சீர்திருத்தம் மீளப்பெறமாட்டாது! - உள்துறை அமைச்சர் சீற்றம்..!!


நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டத்தில் பலத்த வன்முறை பிரயோகிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் தாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், உள்துறை அமைச்சர் Gérald Darmanin மேற்படி வன்முறைகளுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'நான் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு ஆதரவாக உள்ளேன். ஆனால் வன்முறை மூலமாக அதில் மாற்றங்களைச் செய்ய முடியும் என எனக்குத் தோணவில்லை. வன்முறை மூலம் அது தோற்கடிக்கப்பட்டால் அது ஜனநாயகம் இல்லை' என தெரிவித்தார்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில், 900 குப்பைத் தொட்டிகள் தீகிரையாக்கப்பட்டதுடன் பல்வேறு கடைகள் சேதமாக்கப்பட்டிருந்தன.

நேற்றை ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


ad

ad