மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர். அதனை அடுத்து நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். |