புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2023

Welcome ஒரே இரவில் 7 மாதா சொரூபங்களை சேதப்படுத்திய விசமிகள்!- ஆனைக்கோட்டை மக்கள் அதிர்ச்சி.

www.pungudutivuswiss.com

ஆனைக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு  ஏழு மாதா சொரூபங்கள் இனந்தெரியாத நபர்களினால்  உடைக்கப்பட்டுள்ளன.

ஆனைக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏழு மாதா சொரூபங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.

ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை சந்திக்கு அருகாமையில் ஒரு சொரூபமும், ஆனைக்கோட்டை கராஜ் பகுதியில் ஒரு சொரூபமும், அடைக்கலமாதா தேவாலயத்தை சுற்றி 3 சொரூபங்களும் ஆனைக்கோட்டை குடிமனைகளுக்கு மத்தியில் உள்ள ஒரு சொரூபமும் உடைக்கப்பட்டுள்ளன.

இதில், சில இடங்களில் சொரூபங்கள் உடைத்து செல்லப்பட்டுள்ளன. சில இடங்களில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவங்கள் விசமிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதி கத்தோலிக்க மக்கள் இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக வைத்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

   
   

ad

ad