இலங்கை வானொலியிலும்,பி.பி.சி. தமிழோசையிலும் அறிவிப்பாளாராக பணியாற்றிய மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்
விமல் சொக்கநாதன் மறைவுக்குப் பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விமல் சொக்கநாதன் அண்மையில் இலங்கைக்கு விஐயம் செய்து யாழ்ப்பாணத்தில் தனது நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.