புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2023

ரிக்ரொக் எடுத்த 2 இளைஞர்கள் தோணி கவிழ்ந்து மரணம்! - 4 பேர் நீந்திக் கரைசேர்ந்தனர்.

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி, கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேர் நீந்தி உயிர்தப்பினர்.

மட்டக்களப்பு - சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி, கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேர் நீந்தி உயிர்தப்பினர்

நேற்றுமாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மட்டு. சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன், மாமாங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர்

சீலாமுனை மாமாங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் டிக்ரொக் வீடியோ தரவேற்றம் செய்வதற்காக நேற்று காலை 11 மணியளவில் சீலாமுனையில் இருந்து தோணியில் வாவியில் பயணித்து நாவலடிக்கு சென்று அங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை ரிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் சீலாமுனைக்கு தோணியில் பயணித்தபோது தோணியின் கட்டப்பட குல்லாதடி இரண்டாக உடைந்து தோணி வாவியில் கவிந்ததையடுத்து அனைவரும் நீரில் முழ்கினர்.

இதனையடுத்து 4 பேர் நீந்திகரையடைந்ததுடன் இருவர் காணாமல் போயிருந்ததையடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்களை தேடியநிலையில் நாவலடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

ad

ad