நாகை-இலங்கை இடையே சனிக்கிழமை தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து இன்று ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டு உள்ளது. போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் திங்கட்கிழமை (16) மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |