தேர்தலிற்கான உறுதியான திகதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பு சட்ட கட்டமைப்புகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் அரசமைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக பின்பற்றியே தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலிற்கான ஏனைய நடவடிக்கைகளிற்கான நிதியை பெறுதல் ஆவணங்களை தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் 2025ம் ஆண்டிலேயே பொதுத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல்களை துரிதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார் |