புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2023

விஜயகாந்த் மறைவுக்கு சுமந்திரன், சாணக்கியன் இரங்கல்

www.pungudutivuswiss.com


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மறைவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் கப்டன் விஜயகாந்த்தின் மறைவால் துயருறும் நம் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அந்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மறைவு திரை உலகம் மற்றும் தமிழக அரசியலிலும் மட்டுமல்லாது இலங்கைத் தமிழருக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

புரட்சிக்கலைஞர் கப்டன் விஜயகாந்த் எம் மக்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். அவரது அள்ளித்தரும் பண்பும் பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த அன்புள்ளம் கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மற்றும் தமிழக அரசியலிலும் மட்டுமல்லாது இலங்கைத் தமிழருக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும்.

புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

ad

ad