தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் கப்டன் விஜயகாந்த்தின் மறைவால் துயருறும் நம் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அந்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மறைவு திரை உலகம் மற்றும் தமிழக அரசியலிலும் மட்டுமல்லாது இலங்கைத் தமிழருக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். புரட்சிக்கலைஞர் கப்டன் விஜயகாந்த் எம் மக்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். அவரது அள்ளித்தரும் பண்பும் பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த அன்புள்ளம் கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மற்றும் தமிழக அரசியலிலும் மட்டுமல்லாது இலங்கைத் தமிழருக்கும் ஓர் மிகப்பெரிய இழப்பாகும். புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் |