புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2023

சுவிஸ் பயணத்தை ரத்து செய்த ஈரானிய ஜனாதிபதி

www.pungudutivuswiss.com


ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சீ, சுவிட்சர்லாந்திற்கான விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள உலக ஏதிலிகள் மாநாட்டில் ஈரானிய ஜனாதிபதி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்வதனால் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

சுவிஸ் வாழ் ஈரானிய பிரஜைகள் மூவர், ராய்சீயை கைது செய்யுமாறு நீதிமன்றில் கோரியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கைது கோரிக்கைக்கு மேலும் 330 பேர் தங்களது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.

சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் ஈரானிய ஜனாதிபதி தனது சுவிட்சர்லாந்து விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

ad

ad