இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தனக்கு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மருந்து தேவைப்படுவதாகவும், தன்னை தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சிறைக் கைதிகள் உயிரிழக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கு இவ்வாறானதொரு அனுமதி வழங்கப்படுமாயின் அந்தத் தீர்மானத்தை வழங்கும் வைத்தியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். |