புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2024

பூவரசங்குளத்தில் பேருந்து சில்லில் சிக்கி முதியவர் மரணம்

www.pungudutivuswiss.com


வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்

வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, தரித்து நின்ற சமயத்தில் முதியவரொருவர் அதில் ஏற முற்பட்ட சமயத்தில் சாரதி வாகனத்தை செலுத்தியமையினால் சில்லில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்தனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டமையுடன் பேரூந்தினை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் எடுத்துச்சென்றனர்.

ad

ad